Old is Gold



















ஐரோப்பியர் பழமையைப் பேணுவதில் வல்லவர்கள்;
அதைப் பணம் பண்ணுவதிலும் விண்ணர்கள்.

இங்கு சாதாரணமாக வீடுகளில் உள்ள பொருட்களுகே!!!
நூற்றாண்டுக் கணக்கில் வயது சொல்லுவார்கள்.

இவர்கள் சிலை ;ஓவியம் என்றல்ல !!!எதையும் பழசானால்
பேணுகிறார்கள்; அதைப் பணமாகிறார்கள்.

பழம் பொருள் அங்காடி இங்கே செல்வம் கொழிக்கும்
ஓர் தொழில்!!!!; இதில் பலர் ஈடுபட்டு செல்வச் சீமானாகவும்;
உலக நாடுகளையே வலம் வந்தவர்களாகவும் உள்ளது ;
கண்கூடு.

இத் தொழிலில் யூதர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள்.
கச்சிதமாகப் பணம் பண்ணுகிறார்கள்.

குடும்பமே இக்கலையில் கரைகண்டவர்களாக இருக்கிறார்கள்.
நம்பகக் கஸ்ரம் ஓர் சிலை பற்றிய விளக்கம் என் மனைவிக்குக் கூறிய பையனின் வயது 9.

சிலை;ஓவியம்;நகை;உடை; இசைத்தட்டு;முத்திரை;
உலோகப் பொருட்கள்; மரத் தளபாடங்கள்;கருவிகள்;
கண்ணாடிப் பொருட்கள்;பீங்கான் பொருட்கள் என

5 கண்டத்திலுள்ள
அனைத்தையும் ஒரே இடத்தில் குவிப்பார்கள்
.

இத்தடவை பார்த்ததில் இந்தியப் பொருட்கள்
மிகக் குறைவு.

இங்கு வந்த காலம் முதல் இதை பார்க்க வருடாவருடம் செல்வேன்; இம் முறை என் குட்டி NIKON உடன் சென்றேன்.

வாத்சாயனரின் சூத்திரங்களை யானைத் தந்தத்தில் யப்பானியர் வடித்த உள்ளங்கையளவு சிலைகள்(இந்த சுளகும் தானியமும் எலியும் போல்) ; தணிக்கை கருதிப் பிரசுரிக்கவில்லை.

சிலர் படம் பிடிக்க அனுமதிக்கவில்லை. பலர் அன்புடன் விளக்கமும் தந்து படமும் பிடிக்க விட்டார்கள்.

நான் எப் பொருளையும் வாங்கக் கூடியவனில்லை என்பது தெரிந்தும்.இங்குள்ள பொருள்களில் மிகவிலை குறைந்ததே!!! 50 யூரோக்கள்........

ஒரு கரண்டி கிடைக்கும் அந்த விலைக்கு....!!!!

இவற்றை ஒருங்கே ஓர் இடத்தில் பார்ப்பதே எனக்கின்பம்!!!!பார்த்து ரசித்தேன்.

படமும் பிடித்தேன் உங்களுக்காக...

மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....

மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....

" மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!!!".....இப்படி ஓர் பழ மொழியோ!!!,சொல் வழக்கோ!!
நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

அதாவது...இதைச் சொல்பவர்கள் எல்லோருமே!!!! ஆற்றைக் கடக்க ஒருவன் மண்ணில் குதிரையைச் செய்து முயலக் கூடாது; எனும் கருத்திலேயே!!!! உபயோகிக்கிறார்கள்.
அவன் ஆறு கடக்க ; மண்மாடோ!
மண் கழுதையோ; மண் கப்பலோ
நம்பக்கக் கூடாதெனச் சொல்லவில்லை.
மண் குதிரையெனவே! சொல்லப்பட்டுள்ளது.

இதைப் பற்றிச் சிந்தித்தால் ; ஆறைக் கடக்க குதிரை தேவை எனும் சிந்தனையுள்ள ஒருவன்; அதை மண்ணிலா???செய்வான்....

எனவே!!!!!இந்தக் "குதிரை" சிந்தனைக்குரியது.
ஏன்??? இந்த சொல்வழக்கம் வந்தது.சிலர் கூறுகிறார்கள் ....இது மண்குதிரை அல்ல "மங்கு திரை" அதாவது அடங்கி; தேய்ந்து போகின்ற அலை;.;;;;;(திரை=அலை- திரை கடலோடியும் திரவியம் தேடு); அதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.காரணம் அது மீண்டு வரும்.
ஆனாலும் ஆற்றில் அலைகள் ; கடலைப்போல வந்து போகும் தன்மையற்றது; பதிவை நோக்கி வெறியுடன் வழிந்தோடுவது....அதனால் மங்கும் திரை ;மங்கும் அலை சாத்தியமல்ல!!!ஆற்றலை பொங்கும் அலை!

அப்படியானால் ....;என்ன தான் சொல்லியுள்ளார்கள்.
அவர்கள் சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்!!!

அவர்கள் சொன்னது...;மண் குதிர் ; அதாவது மண்பிட்டிகள்;மண் திட்டுக்கள்! ஆற்றின் ஓட்டதால் வரும் மண் அங்காங்கே!! குவியலாகச் சேரும் அது "நெற்குதிர் போல் கூம்பாக இருக்கும் ;அதை நம்பி ஆற்றில் இறங்கினால். அதில் காலை வைத்தால்( அது உயரமாக உள்ளதைப் பிட்டி என நம்பி)
சொரிந்து போகும் தன்மையுடைய "மண் குதிர்" கலைந்து; நீருனுள் அமிழும் ஆபத்துள்ளது.
இதைத் தான் நம் முன்னோர் !!!!சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்.
நாமோ;;நம்முரையாசிரியர்களோ!!!!தவறாகப் புரிந்து விட்டோமென!!!
நான் இலங்கையில் மலையகத்தில் கடமைபுரியும் போது; ஆற்றில் குளிக்கையில் ஓர் முதியவர் விளக்கினார்;
அவர் விளக்கம் பொருத்தமாகத் தானே உள்ளது.

நீங்கள் என்ன ?? சொல்கிறீர்கள்!
இப்போ பார்ப்போமா,,,???"யை" ஐ விட்டு!

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!!!

பரிசோதனைப்பதிவு

இது ஒரு பரிசோதனைப்பதிவு