காளான் விலை 150,000 யூரோ- மயக்கம் போட வேண்டாம்


கடந்த 50 வருடங்களில் முதற் தடவையாக இந்த 1.5 கிலோ எடையுடைய வெள்ளை

Truffe வகைக் காளானை இத்தாலியில் எடுத்துள்ளார்கள்.

இதன் விலை ஏலத்தில் ஒன்றரை இலட்சம் ஈரோக்கள் விலை போனதாக தொலைக் காட்சியில் கூறினார்கள்.


காளான் வகையில் நிலத்துக்கடியில் கிடைக்கும் இவ்வகைக் காளான்கள், விலை மிக அதிகமானவை. இவற்றில் கறுப்பும் , 2 ம் படத்தில் உள்ளதுபோலும் உண்டு. இவை விலை குறைந்தவை. கிலோ 3 ஆயிரம் ஈரோவரை விற்பார்கள்.




இவை பிரன்சில் chenes, ஆங்கிலத்தில் oak எனவும் தமிழில் சிந்தூரம் என கூறப்படும்


மரத்தின் வேரிலிருந்து உருவாகிறது.


இதை நன்கு பயிற்றப்பட்ட நாய்,பன்றி அத்துடன் சில வகை இலையானின் நடமாட்டத்தையும் வைத்து, நிலத்துள் இருப்பதைக் கண்டுபிடித் தெடுப்பார்கள்.


ஐரோப்பிய சமையலில் இதன் பங்கு உண்டு. பணம் படைத்தோரின் உணவு..விலையைப்பார்த்துப் புரிந்திருப்பீர்கள். குளிர்காலத்தில் இதைத் தேடுவது அதிகம். வாராந்த காளான் சந்தையில் இவை விலை பேசப்படும்


இந்த வகைக் காளான் எடுக்கும் விதத்தை அந்த தொலைக்காட்சிச் செய்தியுடன் பார்க்க

http://videos.tf1.fr/video/news/insolite/0,,3636356,00-truffe-blanche-decouverte-italie-.html">இங்கே/a>>

சூரன் போர்....


உலகெங்கும் முருகனாலயாங்களில் கந்த சஸ்டி நோன்பிருந்து, இன்று சூரன்
போரும் நடைபெற்றுள்ளது.
எங்கள் இளமைக் காலத்தில் இந்தச் சூரன் போர் ஈழத்து முருகன் கோவிலெங்கும்
மிக அமர்க்களமாக நடக்கும்.
இன்று கூட ஈழத்தில் ,நடைபெறுவதாகக் கூறினார்கள். ஈழத்தில் எந்தச்
சின்ன முருகன் கோவிலிலும் சூரன் உருவம் இருக்கும்...
அந்தப் பக்தி மயமான நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் முருகன் கோவிலிலும் கந்தபுராணப் படிப்புடன்,சூரன் போர்
திருக்கல்யாணம் எனச் சிறப்பாக இந்தக் கந்த சஸ்டி நிறைவுறும்.

சூரன் போர் அன்று மாலை கோவிலடி களை கட்டி விடும். சூரன் பகுதி

முருகன் பகுதி கூடாரம் இருக்கும்.சூரன் கூடாரத்தில் பறை அடிக்க ஏற்பாடு
செய்வார்கள். சூரன் புறப்பாடு பறை முழக்கத்துடன்
ஆரம்பமாகும்.

சிறுவர், கூட்டம் கும்மாளமடித்துக் கொண்டு திரிவோம்.

எங்கள் சூரன் சுமார் 7 அடி உயரம், பிதுங்கும் விழி, கையில்
அம்பு வில்’ நீல நிறத்தில் ,அச்சுறுத்தும் பார்வையுடன் இருப்பார்.

அவர் நெங்சு பிளக்கும் அமைப்பு பலரால் போற்றப்பட்டதுடன்
சுமார் 75 வருடங்களுக்கு முன் அதைச் சிறப்புற அமைத்தது
பலரை வியப்புக்குள்ளாக்கியது.

குறிப்பாக இந்தச் சூரன் சிங்கத்தலை,யானைத்தலை,எருமைத்தலை
என பல தலைமாற்றங்கள் செய்யக்கூடியது.


வீதிக்கு ஒரு தலையாக முருகன் வீழ்த்துவார்.

கடைசியாக மாமரக்கிளையுடனும் வருவார். அந்தக் கிளையில் தொங்கும்
மாங்காய்க்கு சிறுவர்கள் அலைவோம்.

அத்துடன் அந்த மாங்காய்க்கு, திருமணமான பெண்களிடமும், பலகாலம்
குழந்தைப் பாக்கியமில்லாப் பெண்களிடமும் கிராக்கி அதிகம்.
சிலர் தமக்குக் கிடைப்பதிலும் ஒரு துண்டாவது, இப்பெண்களுக்குக்
கொடுப்பார்கள்.

அந்த மாங்காய் உண்டால், குழந்தைப் பாக்கியம் கிட்டுமென்பது நம்பிக்கை.
அது நடந்ததாகக் கூடப் பலர் கூறக் கேட்டுள்ளேன்.


பின் வந்த பட்டன வாழ்வில் இந்த விழாவின் வண்ணங்கள்
குறைந்து, போருடன் இல்லாமலே போய்விட்டது.
எங்களூர்ச் சூரன் போல்.....






அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திருமுருகாற்றுப்படைதனிலே வருமுருகா- முருகா

பாட்டுடைத் தலைவனென்று உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் - முருகா
அறுபடை......


வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு அந்த
வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ
அமர்ந்த பழனி ஒரு படை வீடு - முருகா
அறுபடை....


ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல
ஓமெனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்தமலை
எங்கள் தமிழ்த் திருநாடுகண்ட சுவாமிமலை....
அறுபடை

தேவர் படைத் தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை


குறுநகை தெய்வானை மலரோடு உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரம் குன்றமெனும் படைவீடு
அறுபடை

தேவர் குறைதவிர்த்துச் சினம் தணிந்து
வள்ளி தெள்ளுதமிழ்க் குறத்தி தலை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை, எங்கள்
கன்னைத் தமிழர் திருத் தணிகை மலை..
அறுபடை

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர் சோலை
அறுபடை


இந்த நாளில்....
இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் எழில் முருகனாக,ஜெயலலிதா- வள்ளி, கே.ஆர்.விஜயா- தெய்வயானையாகவும்
என் அபிமான சீர்காழியார்.. நக்கீரராகவும் தோன்றிய சிறப்பாகப் பாடி
நடித்துள்ளார்.
கண்ணதாசனின் வண்ணவரிகள்.. அறுபடைவீட்டின் சிறப்பைக் கூறும், மற்றுமொரு திருப்புகழ்.
திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் காம்போதி,இந்தோளம்,சக்கரவாகம்,கானடா,ஹம்சானந்தி,
நாட்டைகுறிஞ்சி, காவி ராகங்களில் அற்புதமான அமைந்த
ராகமாலிகை.
புல்லாங்குழலும், மணி ஒலியும் இப்பாடலின் இசையில், பக்திமயமாக அமைந்தது .பெரும் சிறப்பு...

****இதை யூரியூப்பில் பதிவேத்திய Seventucenz க்கு நன்றி

** முதற் படம் நல்லூர் ஆறுமுக சாமி தேர்ப் பவனிப் படம், தம்பி கானா பிரபா பதிவில்

பிரதி எடுத்தது.



இந்தியாவில் எப்படி ? அழைப்பீர்கள்!!!!!

Unknown Vegetable

மலை நாடரின்...இப்படி இருந்த நான் எப்படி ஆனேன்..பதிவைப் பார்த்தபின்பு
அவர் படம் போட்டுள்ள மரக்கறியின் பெயரைத் தேடிச் சென்ற போது;
இந்தப் படம் வந்தது.

அதில் இதற்குப் பெயர் தெரியாது எனப் போட்டுள்ளது.
இதை ஈழத்தில் கருக்குப்பிசுக்கு என்போம்; கருக்குள்ளதால்; இதைப் போல்
இன்னும் ஒன்று மேற்பாகம் வழு வழு என இருக்கும் அதைப் "பாற்பிசுக்கு"
என்போம்.

இதை இந்தியாவில் எப்படி? அழைப்பீர்கள்...
இதன் தாவரவியல் பெயர்...ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட முடியுமா???

மகா கவி பாரதி 125 ம் ஆண்டு விழா...பாரிஸ்


பாரிசில் மகா கவி பாரதியாரின் 125 ம் ஆண்டு நிறைவு விழா ,
சென்ற 4 நவம்பர் 2007, ஞாயிறு அன்று பிரான்சுத் தமி்ழ்ச்
சங்கத்தினருடன்; பிரான்சில் இயங்கும் வேறு பல தமி்ழ் சமூக
பண்பாட்டுச் சங்கங்களின் அனுசரணையுடன்...தமி்ழகத்திலிருந்து
அறிஞர்கள்; கலைஞர்கள் வருகையுடன்; உள்ளூர் அறிஞர்கள்;
வளரும் கலைஞர்கள் நிகழ்ச்சியோடு வெகு விமரிசையாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இனிதே!! நிறைவெய்தியது.

இந்த 125 ஆவது பாரதி பிறந்த தினம் ,உலகிலேயே பாரிசில் தான் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார்கள்.

இவ்விழா இந்தியத் தூதுவர் திரு ரஞ்சன் மத்தை தலைமையில் நடைபெற்றது.

புதுவையில் இருந்து முன்னாள் கல்விஅமைச்சர் திருமதி ரேணுகா அப்பாத்துரை அழைக்கப்பட்டு;; "பாரதிகண்ட புதுமைப் பெண்" விருது
வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

உலகத் தமிழர் பேரவை திரு. இரா. சனார்த்தனம் அவர்களும் கலந்து
கொண்டார்கள்.



சென்னை வானொலிக் கலைஞர் "இளசை சுந்தரம்" அவர்கள்.."பாரதி இன்றிருந்தால்" எனும் நிகழ்ச்சி, நகைச்சுவையுடன் அமைந்து; பார்வையாளர்களைக் கவர்ந்தது.




பிரன்சுத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தசரதன் பேசுகிறார்
சென்னை சண் தொலைக்காட்சிக் கலைஜி , ஆடலரசி திவ்யா கஸ்தூரி
அவர்கள் பாரதியார் பாடல்களுக்கு நடமாடினார். ஒரு மணி நேரம் நடந்த
இந்த நிகழ்ச்சி கண்ணுக்கு நல்விருந்து...


திருமகளாக.......



>

கலைமகளாக.......
மலைமகளாக........








வெகு நாட்களின் பின் ஒரு அருமையான பரத நாட்டியம் பார்க்கக் கிடைத்தது.
இதை ஏற்பாடு செய்த விழாக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அமைச்சர் ரேணுகா கூட வெகுவாக நடன தாரகையைப் புகழ்ந்தார்.




அத்துடன் பாரிசில் நடனம் பயிலும் ; நம்மவர் பிள்ளைகளின் பாடல்;
ஆடல் மி்கச் சிறப்பாக அமைந்தது.






பாரிசில் தமிழ் பயிலும் மலேசியப் மாணவி கதரின், பிரன்சு மாணவன் நிக்கோலா


இந்த விழாவில் என்னை மி்கக் கவர்ந்தது. பாரிஸ் பல்கலைக்
கழகத்தில், பிரன்சு மொழியையும்;மலே மொழியையும் தாய்
மொழியாகக் கொண்ட ; திரு. முடியப்ப நாதன் அவர்களிடம் ;
தமி்ழ் கற்கும் நிக்கோலா; கதரின் எனும் இரு மாணாக்கர்கள்..
பாரதி பாடலை சொல்லியது.





இறுதி நிகழ்வாக புதுவை பல்கலைக் கழக தலைக் கோல் ஆறுமுகம் அவர்கள்,பாஞ்சாலி துகிலுரி படலம் "தெருக் கூத்து" இடம் பெற்றது.



இது தனி நபர் நிகழ்வு

உணவு பரிமாறப்படுகிறது.....

மதியம் ;பாரிஸ் கம்பன் கழகத்தின் சார்பில் வந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கினார்கள்


மிக உணர்வுடன் உரை ஆற்ற முற்பட்ட வழக்கறிஞர் திரு.ரவி(சென்னை)

அன்றைய நிகழ்வுகளைக் படங்களுடன்; காணொளியாகவும் தந்துள்ளேன்.
என் மி்கச் சிறிய கருவியால்; தெளிவான படங்கள் எடுக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.

இவ்வளவு சிறப்பான விழாவிலும் மனதுக்கு நெருடலான விடயம்; பல உள்ளூர்ப் பேச்சாளர்களுக்கு இடம் கொடுத்து; நேரத்தை வீணடித்து; தமி்ழகத்தில் இருந்து வருகை தந்தவர்களுக்கு போதிய நேரமி்ன்றி; 5;10 என நிமி்டங்கள் கொடுத்து ஏமாற்றியது.

நான் எதிர் பார்த்த தமி்ழருவி மணியன் அவர்கள் விழாவுக்கு வரவில்லை.
மிகப் பெரிய ஏமாற்றம்.
எல்லோருக்கும் மேடையில் பேச இடம் கொடுத்தல்; எல்லோருக்கும் பொன்னாடை என்பதை இனிவரும் காலத்திலாவது தவிர்த்தல்; மி்கச் சிறப்பு.

அத்துடன் இச்சங்கங்களில் அங்கத்தவர்கள் கூட ;தலைவர்களையோ நிர்வாகத்தினரையோ..;மேடையில் பேச இடம் தரும்படி இனி வரும் காலங்களில் நிர்பந்தப்படுத்தாமலும்; கேட்டால் கூட போதிய நேரமில்லையெனில் மறுத்தும் இவ்விழாக்கள் இன்னும் குறைந்த நேரத்தில் ;மேலும் சிறப்பாக , தமி்ழகத்தில் இருந்து வரும் பேச்சையே தொழிலாக உள்ள அறிஞர்களின் சிறந்த உரைகளால் நிரம்ப உதவுவார்கள் என நம்புவோம்.

அத்துடன் நிர்வாகத்தினரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு, பேசுவோர் எண்ணிக்கையை அமைத்தால்.....மிக அருமையாகப் பேசிய சென்னை வழக்கறிஞர் ரவி....’நான் இன்னும் எவ்வளவு நேரம் பேச’ என்று மேடையில் இருந்தே கேட்கும் அவலம் வந்திராது. ‘பாரதியின் அறிவுரை பற்றிப் பேச வந்தவர்.’எனக்கு முன் எல்லோரும் பேசிவிட்டார்கள் எனக் கூறி....இனி நான் என்ன??? பேச என்று சொல்லி இருக்கும் நிலையும் வந்திருக்காது.

இனிவரும் காலத்திலாவது,காலத்தின் அருமையைக் கருத்தில் கொண்டு
உரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழகமிருந்து வரும் பேச்சாளர்களுக்குப் போதிய நேரம், கலை நிகழ்ச்சிகளிலும் வருகை தந்தோருக்கு முக்கியம் எனக் கொண்டால் இந்த விழாக்களால் பயன் உண்டு.

மேடையில் ஏறி அத்தனை பேருக்கும் வணக்கம் கூறி விட்டு இறங்கும் அவலம் இனி வேண்டாம்.

இதையே பலர் விரும்புகிறார்கள். உரியவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம்.