இந்தி நடிகர் சா ருக் கானுக்கு பாரிசில் சிலை.
இந்தியத் திரையுலகின் புகழ் பெற்ற நடிகர் சா ருக் கானுக்கு (Shah Rukh Khan) பாரிசில் Grévin மெழுகுச்சிலைக் காட்சியகத்தில் சென்ற 28 04 2008 ல் சிலை வைக்கப்பட்டது.

இக்காட்சியகத்தில் வைக்கப்பட்ட முதல் இந்தியத் திரை நட்சத்திரத்ததின் சிலை இதுவே!

இச்சிலை சாருக் கான் அவர்களால் அவர் பாரிஸ் ரசிகர்கள் முன்னிலையில் ; இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா அவர்கள் வரவுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவில் பிரான்சின் புகழ்பூத்த மூத்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ,உலகப் புகழ் கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் பிரான்ஸ் பதிப்பான மில்லியனர் (Millionnaire) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் JEAN PIERRE FOUCAULT கலந்து சிறப்பித்தார்.
இக்காட்சியகத்தில் ஏற்கனவே காந்தி சிலை உள்ளது. அதன் பின் சிலை வைக்கப்பட்ட இந்தியர் இவரே!!! முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குக் கூட இச் சந்தர்ப்பம் அமையவில்லை.
கானுக்கு ஏற்கனவே லண்டன் Madame Trussand மெழுகுச் சிலைக் காட்சியகத்தில்
எனைய இந்திய திரைநட்சத்திரங்கள் அமிதாப் பச்சன்;ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோருடன் சிலையுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சமீபத்தில் பிரான்சரசால் இந்திய பிரான்சிய உறவுகளைத் திரைப்படம் வாயிலாக அபிவிருத்தி செய்ததைக் கௌரவித்து "செவலியே" விருது வழங்கியது
குறிப்பிடத்தக்கது.
இச் சிலைத் திறப்பு வைபவத்தில் இந்திய கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
நிகழ்வு பற்றிய மேலதிக படங்களைப் பார்க்க indeaparis.com எனும் தளத்துக்குச் செல்லவும்.
****காணொளி யுருயூப்பில்(You Tube) பெறப்பட்டது.
0 மறுமொழிகள்:
உங்கள் கருத்துக்கு