முதல் பதிவும் அதற்கு வந்தப் பின்னூட்டங்களும்

Tuesday, August 08, 2006
வணக்கம் நண்பர்களே!

Posted by Johan-Paris at Tuesday, August 08, 2006




11 comments:
சின்னக்குட்டி said...
வணக்கம் ...வாங்கோ... வாழ்த்துக்கள் யோகன்.....

11:11 PM
வெற்றி said...
யோகன் அண்ணை,
வணக்கம்.
பலரின் பதிவுகளில் நீங்கள் எழுதிய பின்னூட்டங்களைப் படித்துச் சுவைத்து இருக்கிறேன். ஈழத்தின் பல பழைய சங்கதிகளை பதிவிலிடுங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.

11:12 PM
குமரன் (Kumaran) said...
வணக்கம் யோகன் ஐயா.

11:43 PM
நன்மனம் said...
வணக்கம், வருக! வருக!

1:17 PM
(துபாய்) ராஜா said...
வணக்கம் யோகன் அண்ணா.நல்வரவு.

1:32 PM
நாகை சிவா said...
வாங்க வாங்க யோகன்
வாழ்த்துக்கள்

1:34 PM
G.Ragavan said...
வாங்க வாங்க அண்ணாத்தே

வந்து இனிமே அள்ளி விடுங்க. நடக்கட்டும். நடக்கட்டும்..

1:46 PM
இலவசக்கொத்தனார் said...
வாருங்கள் வாருங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்க காத்திருக்கிறோம்.

2:43 PM
Johan-Paris said...
அன்போடு சின்னக்குட்டி,வெற்றி;குமரன்;நல்மனம்; துபாய் ராஜா;நாகை சிவா;ராகவன்;இலவசக்கொத்தனார்! அனைவருக்கும்; நன்றி!
"வைத்துக் கொண்டு வஞ்சனை செய்து பழக்கமில்லை" அதனால் அறிந்ததைத் தெரிந்ததைப் பகிர்வேன். இன்னும் தொழில் நுட்பம் பிடிபடவில்லை. பெயர் எனது ஆனால்; வீட்டைக் கட்ட முழு உதவியும் செய்தவர் மலைநாடர். காணிஉறுதி (பத்திரம்) யில் கையொப்பமிட்டதே! நான்; நண்பர் மலைநாடர் மிகப் பெரிய ஊக்கமும் உதவியும் செய்கிறார். என் வீட்டையும் உங்களைப் போல் அலங்கரிப்பேன்.
முடியாவிட்டாலும் ;விட்டு விட்டு; உங்கள் வீட்டு அலங்காரங்களை வழமை போல் ரசித்து ஊக்குவிப்பேன்.
மனதில் பட்டதைக் கூறுகிறேன். உங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அழகான தலைப்புக்களில் சுவையாக எழுதுகிறீர்கள்.
தலைப்புக்களும் தூண்டில் போடுவது போல் இருக்க வேண்டும்.
"தண்ணீரில் விழுந்து விட்டேன்; கையைக் காலை அடித்தே ஆக வேண்டும்." அமிழ்வதைத் தவிர்க்க!
வருவேன்.
உங்கள்
யோகன் பாரிஸ்

1:15 PM
Kanags said...
வணக்கம் பரிஸ் யோகன், இதுவரையில் பின்னூட்டங்களில் மட்டுமே அறிந்திருந்தேன். உங்கள் பதிவுகளையும் படிக்க ஆவலாயுள்ளேன். உங்களை தமிழ் மணத்திற்கு அறிமுகம் செய்த குமரனுக்கு நன்றிகள்.

2:19 PM
கானா பிரபா said...
வணக்கம் யோகன் அண்ணா

நாலு நாள் இணையத்தொடர்பில்லாத பூமியில் வேலை. அதனால் உடனே வரமுடியவில்லை. உங்களின் நிரம்பிய தாயக நினைவுப்பதிவுகளை எதிர்ப்பாத்துக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். வாழ்த்தி வரவேற்கின்றேன்.

3:12 PM

3 மறுமொழிகள்:

Anonymous :சொல்வது

வந்தப் பின்னூட்டங்களும்?

பகீ :சொல்வது

யோகன் அண்ணா இரு பதிவிலும் எழுதுகிறீர்களா அல்லது இப்போது "எனது பார்வை" மட்டுந்தானா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

பகீ!
பீற்றாவுக்கு மாற்று முன் " என் பார்வையில்" என எழுதினேன். மாற்றத்தில் ஏற்பட்ட கோளாறால் அன்பர் குமரன் சொன்ன வண்ணம்; புதிய தளத்தை " என் பார்வை" எனத் தொடங்கி....அது கூட "தமிழ் மணக் கருவிப்பட்டை" பொருத்தும் சிக்கலால்; தடையாகிவிட்டது. இவை எப்போதீருமோ தெரியவில்லை. எனக்கும் வழி தெரியவில்லை. தெரிந்தவர்களுக்கு உதவ நேரமில்லை. அதனால் இந்தப் பதிவு போடும் வேலையைக் கைவிடுவோமா???எனும் மனநிலைக்கு வந்து விட்டேன்.
சரிவந்தால் தொடர்ந்து "என் பார்வை" மாத்திரம் வரும்...பழைய பதிவுகளை இதற்குத் திரட்ட முற்படுவேன்.
இல்லையோ!!! 31 டிசம்பரின் பின் ;இந்த முற்றாக ஒதுங்குவதெனத் தீர்மானித்துள்ளேன்; கணனி அறிவும் முக்கியம்...அது இன்றி ....இப்படியான இலவச சேவைகளில் சமாளிக்க முடியாது.
உண்மை தற்போது எதுவுமே!! எழுதுவதில்லை.
நானே எழுதி நானே வாசிக்கப் பதிவா!!! போட வேண்டும்.
தமிழ் மண முகப்புக்கு என் பதிவு வராமல் எழுதுவதில் என்ன?? பயன்.
ஆனாலும் படிக்க விரும்புபவன் எனும் வகையில்; மற்றவர் எழுத்துக்களைப் படிப்பேன்.
யோகன் பாரிஸ்