சிலைகள் திருட்டு...கண்காட்சி ரத்து..


பாரிசில் உள்ள ஆசிய அரும் பொருட் காட்சியகமான கீமேயில்

(Musee Guimet).. எதிர்வரும்

ஜனவரி முதல் மார்ச் 2008 வரை ,நடைபெற இருந்த 'வங்காள

தேச நாட்டின்- அரும் பொருட்காட்சிக்கான 165 அரும் பொருட்களில், 2 விலையுயர்ந்த 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் திருடப்பட்டன ,
அதனால் அந்தக் கண்காட்சியைக் ரத்துச் செய்து மிகுதிப் பொருட்களை திருப்பி அனுப்பும் படி வங்காள அரசு கேட்டுக் கொண்டதால் அக் கண்காட்சி ரத்துச் செய்யப்பட்டது.

இச் சிலைகள் பகுதி பகுதியாக டாக்கா விமான நிலையத்தினூடு பாரீஸ் வந்தடைந்தது.

இச் சிலைகள் ஏற்றும் வரை டாக்கா விமானநிலைய பொதி அறையில் இருந்துள்ளது.

அங்கிருந்து பாரிஸ் விமானநிலையம் வருமுன் இவ்விரு சிலைகளும்

காணாமல் போய் விட்டதாக, கீமே இயக்குநர் கூறினார்.

இவை சுடுமண்ணால் ஆன சுமார் ஒவ்வொன்றும் 6 மில்லியன்

பெறுமதி மிக்கவை எனக் கூறப்படுகிறது.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இது வங்காள தேச அதிகாரிகளின்ஆதரவுன்றி வெளியேற முடியாது. அத்துடன் பாரிஸ் பக்க அதிகாரிகளுக்கும்
தொடர்வு இல்லாமல் இருக்க முடியாது.

பாரிஸ் பக்கம் அவற்றின் பெறுமதி தெரிந்தோர், வங்காள தேசப்பக்கம்

தமது நாட்டின் என்ன??போனாலும் நம் கையில் நாலு காசு வரும்

என நினைப்போர் , இந்தக் கூட்டுக் களவு தான் இச் சிலையின்

மறைவுக்குக் காரணம்.



எந்த நிலையிலும் கலையார்வம் மிக்கோருக்கு இந்தக் காட்சி ரத்து ஏமாற்றமே!!
இங்கே காட்சிக்கு வரவிருந்த அரும் பொருட்கள் சிலவற்றின் படங்களிக் காண...

இங்கே அழுத்தவும்

எனக் கொரு சந்தேகம்... வங்காள தேசம் இஸ்லாம் தேசமென்கிறார்களே!!

இங்கு காட்சிக்கு வரவிருந்த அரும் பொருட்கள்...யாவும் புத்தமத,

இந்து மதச் சிலைகள் அதுவும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இந்த இஸ்லாமிய தேசத்தில் ஏன்??அரும் பொருள்...இஸ்லாம் மார்க்கம்

பற்றியதாக இல்லை.

படங்கள்***Musee Guimet முகப்புத் தோற்றம், உள்த் தோற்றம்.

2 மறுமொழிகள்:

david santos :சொல்வது

Nice posting, thank you,


Happy New Year! And best wishes for a healthy and successful 2008

இறக்குவானை நிர்ஷன் :சொல்வது

தரமான இடுகை.

நீங்கள் சொல்வது போலவே
தெரியத் தெரிய தெரியாதவை தெரியும்.