நிச்சயம் நீங்க தமிழர் தான்!.....இப்படி இருந்தால்.....



இன்று காலை மின்னஞ்சல் ,திறந்ததும் என் நண்பர் சென்னையில் இருந்து அனுப்பிய இந்த விபரத்தைப் பார்த்ததும்; உங்களுடன் பகிரவேண்டும் போல் இருந்தது.அதுவும் 20ம் குறிப்பை நிரூபித்து தானும் தமிழனே என்று !உறுதிப்படுத்த வேண்டாமா???நண்பர் வட்டத்துள் சொல்லி விட்டேன்.நீங்களும் சுயசோதனை செய்யவும்.


1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா°..

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

16 மறுமொழிகள்:

Anonymous :சொல்வது

hey this was already printed in ananda vikatan's deepavali sirappu malar

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

அநாமி!
அப்படியா? நான் விகடன் தீபாவளி மலர் படிக்காததால் தெரியவில்லை. நண்பரும் அது பற்றிக் குறிப்பிடவில்லை.
என்னைப்போல் படிக்காதோர் படிக்கட்டும்; தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH :சொல்வது

இதில் பாதி சரியில்லை!

வவ்வால் :சொல்வது

யோகன்,

என்னை தமிழன் இல்லைனு எப்படி சொல்லப்போச்சு... இப்படிலாம் ஒரு தமிழனை தமிழன் இல்லைனு குற்றம் சொல்லும் உரிமையை யார் தந்தா உங்களுக்கு?

நீங்க போட்ட 20 நிபந்தனைகளில் 1 தான் எனக்கு பொருந்துது , அந்த ஒன்று இதான்
//18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!//

அதிலும் நான் பரம சாது தண்ணி அடிச்சா மட்டும்,(தண்ணி அடிக்காம இருந்தா சூறாவளிதான்) அப்போதுலாம் அடக்க ஒடுக்கமா இருப்பேன்.எனவே இதிலும் பாதி தான் சரி.

மற்ற எதுவுமே எனக்கு செட் ஆகலையே :-(

அப்போ நான் தமிழன் இல்லையா , அய்யகோ இது என்ன வவ்வாலுக்கு வந்த சோதனை!(இந்த சோகத்த மறக்க உடனே போய் ஒரு குவார்டர் விடனும்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சுப்பையா அண்ணா!
இதில் பாதி சரியில்லை; மீதி சரி என்கிறீர்கள். வவ்வால் ஒன்ணே ஒண்ணில் பாதி(1/2) சரியில்லை என்கிறார்.
இந்த பொதுவான புள்ளிவிபரங்களே இப்படித்தான் முன்ன பின்ன இருக்கும் போல..
நமக்கோ பலது சரியாக இருந்தது. அதுவும் கடைசி மிகச்சரி...இதைப் பார்க்கவே தெரியுதே!!

உண்மைத்தமிழன் :சொல்வது

யோகன் ஸார் மேலே சொன்ன 20-க்கு 20-ம் நான்தான்..

அப்போ நான்தானே உண்மைத்தமிழன்..

//அப்போ நான் தமிழன் இல்லையா , அய்யகோ இது என்ன வவ்வாலுக்கு வந்த சோதனை!(//

இது நூத்துக்கு நூறு சரி.. புலம்பி என்ன புண்ணியம்..? பேசாம குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற கவுந்துக்கின்னு.. ச்சீ.. தலைகீழா கவுந்துக்கின்னு தூங்கலாம் வவ்ஸ்..

வவ்வால் :சொல்வது

யோகன்,
//வவ்வால் ஒன்ணே ஒண்ணில் பாதி(1/2) சரியில்லை என்கிறார்.//

நாசமா போச்சு போங்க :-)),

நான் சொன்னது 20 இல் 19 சரி இல்லை, 1 சரியா வருது அதிலும் பாதி தான் சரியா வருதுனு ,அப்போ 19.5 தப்பா வருது , எனவே நான் தமிழனு சொல்லிக்க முடியாது போல இருக்கேனு சொல்லி இருந்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

இத்தால் சகலருக்கும் அறியத்தருவது!!!
வவ்வாலுக்கு தலைகீழாத் தொங்குவதால் 1/2 தான் சரியாம்.

வவ்வால் :சொல்வது

உண்மைத்தமிழர்,

//யோகன் ஸார் மேலே சொன்ன 20-க்கு 20-ம் நான்தான்..

அப்போ நான்தானே உண்மைத்தமிழன்..//

//18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!//

அப்போ இதுவும் செய்றிங்க தானே?


அப்போ தீவாளி , பொங்கல் போல நல்ல நாளு அதுவுமா சரக்கடிச்சுட்டு வம்பு வளத்து போலீஸ் டேசன்ல தான் குந்தி இருப்பிங்க ? அப்போ என்னாத்துக்கு மற்றப்பதிவுல எல்லாம் சரக்கா நானா ... ச்சே... ச்சே அபச்சாரம்னு சொல்றது?

அப்போ அங்கே சொன்னதுலாம் பொய் தானே இருங்க சீக்கிரமா ஒரு தனிப்பதிவா போட்டு உங்க வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்துறேன்! :-))

உண்மைத்தமிழர் இல்லை ஊர ஏமாற்றும் தமிழர் :-)) அப்படினு உலகம் சொல்லப்போவுது!

ஆ.கோகுலன் :சொல்வது

எல்லாம் O.K. ஆனால் அந்த 18 தான் சரியில்லை.

PPattian :சொல்வது

எனக்கும் இதுல பாதிதான் சரியா வருது.. அப்ப நான் பாதி(தான்) தமிழனா.. அய்யகோ..

அந்த ஐபிள் டவர் நீங்க எடுத்ததா? அழகா இருக்கு. PIT போட்டிக்கா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

உண்மைத் தமிழன்!
நீங்கள் உண்மை சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன். சிலர் விதி விலக்காக இருக்கலாம்.
குத்து மதிப்பாகப் பலருக்கும் பொருந்தும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

கோகுலன்!
அந்தப் 18 சரியில்லையா?? இப்படியெல்லாம் குறைவைக்கக் கூடாது.
நிவிர்த்தி செய்துவிடவும்.(பகிடியாக எடுக்கவும்- 18 உண்மையானால் தொடர்ந்து அனுஷ்டிக்கவும்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

பபுட்டியன்!
உங்களைப் போய் பாதித் தமிழன் என முடியுமா?? நீங்கள் தான் மீதித் தமிழன்.
அந்த ஈவில் கோபுரம் ;நான் பிடித்த படமே!!;நிச்சயம் போட்டிக்கல்ல!!
அழகா இருக்கா?? மின்னலங்காரம் செய்தவர்களுக்கே அப்பெருமை சாரும்.

Unknown :சொல்வது

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

வயிறு வலிக்குது திரு.யோகன்

ஹையோ.. ஹையோ..

கோவி.கண்ணன் :சொல்வது

இதைப்படிச்சுட்டு ஒப்புதல் வாக்குமுலம் கொடுப்பதைத் தவிர ஒன்றும் இல்லை

'நான் தமிழன்'
:)