முட்டாள்கள்!! கேரளத்திலுமா??....




நான் கேரள மக்களை மிகப் புத்திசாலித்தனவர்களாகவும்,சிந்தனைத் திறன் மிக்கோராகவும், கல்வியறிவு மிக்கோராகவும் புகழ்வதையே அறிந்துள்ளேன். அது உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் இந்தக் காட்சியைப் பார்த்ததும்...எனக்கு எல்லாமே அதீத கூச்சலோ எனப்படுகிறது.

இந்த அளவுக்கு இவர்கள் ஆய்வுத் திறனற்றவர்களாக இருப்பார்கள் எனக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நீங்களும் இதைப் பாருங்கள்...உங்கள் கருத்தையும் கூறுங்கள்....


பல இலட்சம் மக்கள் கூடும் ஒரு இடத்தில், மிக வலிமை மிக்க சில மிருகங்களைக்

கொணர்து, எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல், மக்களை இவ்வளவு அவலப்பட வைத்ததுடன் ஒரு யானைப்பாகனின் அவல மரணம் கண்முன்னே நடப்பதைக் கூட தடுக்க வல்லமையற்றவர்களான இவர்கள் எப்படி புத்திசாலிகளானார்கள்.

யானை எனும் வல்லமைமிக்க மிருகத்துடன் இத்தனை நூற்றாண்டு பழகியும் அதன் கோரமுகம் இவர்கள் அறியாதது வேதனையே!!

இறந்தது ஒரு ஏழையானைப்பாகன் என்பதால் இந்த அசட்டையா?? புரியவில்லை.

இத்தனை மக்கள் கூடும் இடத்தில் இப்படியான பயங்கர ,சிலசமயம் கட்டுக்குள் இலகுவாகக்

கொண்டுவர முடியாத விலங்கைக் கொண்டுவந்தது மிகத் தவறு.

சரி கொண்டுவந்தார்கள் ஆனால் அசம்பாவிதத்தை ஏதிர்பார்த்து, துப்பாக்கியேந்திய காவலர்களுக்கு சுடக் கூட அனுமதியளித்து கூட்டிவராதாது ஏன்??

கோவில் யானை என்பதால் கொல்ல மனசு வராவிடிலும் ,மயங்க வைக்கவும் கூடாதா??

இலங்கையில் நூற்றுக்கணக்கான யானைகள் பங்குபற்றும் பெரஹரா ஊர்வலத்தில், மயக்கமருந்து பொருத்திய துப்பாக்கியுடன் கூடிய மிருகவைத்தியர்களும், கொல்லக் கூடிய

துப்பாக்கியுடைய காவலர்களும் ,குறிப்பிட்ட இடைவெளியில் குழுக்குவாக உடன் வருவதை

அவதானித்துள்ளேன்.

ஆனால் இப்படியான எந்த ஏற்பாடுமற்ற யானைகள் பங்கேற்கும் இந்த விழாவை அரசு எப்படி

அனுமதியளித்தது.

இவ்வளவு கொடிய நிகழ்வு நடக்க எப்படி அனுமதிக்கிறார்கள்.

அத்துடன் இந்த யானைகளை இவ்வளவு வருத்தியா ஒரு சமயச் சடங்கை நிகழ்த்த வேண்டும்.

யானைகள் வலிமை மாத்திரமல்ல, பாசப்பிணைப்புள்ள விலங்குகள் விலங்குகள்.எத்தனை காலம் சென்றாலும் அவை இலகுவில் அவற்றை மறப்பதில்லை.

அத்துடன் அவற்றின் இனப்பெருக்ககாலத்தில் காதல் செய்ய மிகப் பிரியான விலங்கு, அது கிடைக்காத நிலையில் அது மதம் கொள்வது இயல்பு என மிருக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி கட்டி வளர்க்கும் யானைகளையும் அந்த காதற் காலத்தில் அதற்கு அனுமதித்தால்

மதம் வருவதைத் தவிர்க்கலாம் என மிருக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

எனவே...இனிவரும் காலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகளைத் தவிர்க்க முற்பட

வேண்டும்.

யானைகளைச் சேர்த்தால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்.



0 மறுமொழிகள்: